BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

இலங்கையில் சூரியன் இன்று நேர் உச்சியில்: பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை - பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையில் சூரியன் இன்று நேர் உச்சியில்: பல மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை - பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, இன்று நண்பகல் 12:13 மணிக்கு தெஹிவளை, மகரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்க, எஹெலியகொட, மஸ்கெலிய மற்றும் பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சாதாரணமாகக் காணப்படும் அளவை விட அதிகமாக இருக்கும்.


உயர் வெப்பநிலை நிலவுவதால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் (Hydrated) வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருக்கவும், வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான இலகுவான ஆடைகளை அணியுமாறும், கடினமான உடல் உழைப்பைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனச் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"