ஹிந்தி தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அறியப்பட்ட சஞ்சிதா உகாலே உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
22 வயதான சஞ்சிதா உகாலே, ஹிந்தி சின்னத்திரையில் ஒளிபரப்பான பிரபல தொடரான ‘குங்கும் பாக்யா’வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர். இதனைத் தவிர ‘Chhaava’ மற்றும் ‘Silence 2: The Night Owl Bar Shootout’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் அவர் நடித்திருந்தார்.
மும்பையில் உள்ள தனது இல்லத்தில் அவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலை மீட்டு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது வீட்டில் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருளும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவம் தொடர்பாக எந்தவொரு குறிப்போ அல்லது கடிதமோ மீட்கப்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளம் வயதிலேயே திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றிருந்த சஞ்சிதா உகாலேயின் திடீர் உயிரிழப்பு, அவரது ரசிகர்கள் மற்றும் சக கலைஞர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக