கேரளா சமையல் அதன் தனித்துவமான சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் அசைவ பிரியர்களின் விருப்ப உணவுகளில் ஒன்றாக விளங்கும் மீன் மொய்லி, தேங்காய் பால் மற்றும் மசாலாக்களின் கலவையால் மிகவும் மென்மையான மற்றும் சுவையான குழம்பாக தயாரிக்கப்படுகிறது.
மீன் மொய்லி தயாரிக்க தேவையான பொருட்கள்:
வஞ்சிரம் மீன் அரை கிலோ, தேங்காய் எண்ணெய் 4 டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிதளவு, இஞ்சி 2 இன்ச், வெங்காயம் 2, பச்சை மிளகாய் 3, பூண்டு 6 பற்கள், தக்காளி 2, மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், மிளகாய் தூள் 1 டீஸ்பூன், பிரஷ் தேங்காய் பால் அரை லிட்டர், சிறிய எலுமிச்சை 1, வினிகர் 1 டீஸ்பூன் மற்றும் உப்பு தேவைக்கேற்ப ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.
முதலில் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும். அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி, அவை நிறம் மாறும் வரை சமைக்க வேண்டும்.
அதனைத் தொடர்ந்து நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். தக்காளி நன்றாக மசியும் வரை சமைத்த பிறகு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலவையை கொதிக்க விட வேண்டும். குழம்பு நன்றாக கொதித்த பிறகு மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வேக விட வேண்டும்.
மீன் நன்றாக வெந்த பிறகு தீயை குறைத்து, அதில் தேங்காய் பாலை ஊற்றி மெதுவாக கிளற வேண்டும். இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் வினிகர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விட வேண்டும்.
இவ்வாறு தயாரிக்கப்படும் கேரளா ஸ்டைல் மீன் மொய்லி மிகவும் கிரீமியான சுவையுடன் பரிமாற தயாராக இருக்கும் ஒரு பாரம்பரிய உணவாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக