BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

கம்பஹாவில் பயங்கரம்: வயது நபர் கழுத்தறுத்துக்கொலை - மனநோயாளி கைது!

கம்பஹாவில் பயங்கரம்: வயது நபர் கழுத்தறுத்துக்கொலை - மனநோயாளி கைது!

கம்பஹா - கஸ்பே இலுக்கஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஏப்ரல் 3-ஆம் திகதி நள்ளிரவு பாரிய கொலைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சாந்த ஜயரிசன் சில்வா (51 வயது) என்ற நபர் கத்தியால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் வீட்டிற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜயரிசன் சில்வாவின் கழுத்துப் பகுதியில் பலமாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.


கொலையைச் செய்த பின்னர் சந்தேகநபர் அருகில் உள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் அவரை அவர் பயன்படுத்திய கத்தியுடன் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், அவர் ஒரு மனநோயாளி என்பதும், அதற்காக நீண்டகாலமாக சிகிச்சை பெற்று வருபவர் என்பதும் தெரியவந்துள்ளது. உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"