BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரை பிக்கு கைது: சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரை பிக்கு கைது: சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணம் - நாவற்குழி விகாரையில் தங்கியிருந்த இளம் பிக்கு ஒருவர், சிறுமி ஒருவரைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவற்குழி விகாரைக்கு அருகாமையில் வசிக்கும் குறித்த சிறுமி, கடந்த சனிக்கிழமை (28.03.2026) விகாரை வளாகத்திலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரைப் (Filter Water) பெறுவதற்காகச் சென்றுள்ளார். இதன்போது, விகாரைக்குப் புதிதாக வருகை தந்திருந்த இளம் பிக்கு அச்சிறுமியைத் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் அடிப்படையில் துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சந்தேக நபரான பிக்குவைக் கைது செய்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவானின் இல்லத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, வழக்கை விசாரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"