BREAKING
வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை வசூல் வேட்டையில் ‘பிளாஸ்ட்’: ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் ரூ.70 கோடியை கடந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனை கேரளா ஸ்டைல் சுவையான மீன் மொய்லி செய்வது எப்படி? வீட்டிலேயே எளிய முறையில் ரெசிபி ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம் 22 வயதான நடிகை சஞ்சிதா உகாலே உயிரிழப்பு: காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை கால் விரல்களை இழந்து கடும் பொருளாதார நெருக்கடியில் பாவா லட்சுமணன்: உதவிக்கரம் நீட்டுமாறு விஜயிடம் உருக்கமான கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மாயமான வயோதிபப் பெண் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மாயமான வயோதிபப் பெண் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில், நேற்று (29.03.2026) மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காடு ஒன்றிலிருந்து அவர் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


குறித்த பெண் தனது வீட்டிலிருந்து இறுதியாக வெளியேறிய சிசிரிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனப் பிரதேச மக்கள் சந்தேகிக்கும் அதேவேளை, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற உண்மைத்தன்மையை அறிய கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் சோதனைகள் நடத்தப்பட்டு மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"