மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டத்திருத்த மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதா, உண்மையில் திருநங்கைகளின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
திருநங்கைகள் தாமே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அவர்களின் கருத்துகளை அவசியமாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட உள்ள சமூகத்தின் கருத்துகளை கேட்காமல் சட்டத்திருத்தங்களை மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்துள்ளார்.
திருநங்கைகளுடன் நேரடி கலந்துரையாடல் நடத்தி, அவர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு ஒருமித்த முடிவை எடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த மசோதா குறித்து விரிவான பரிசீலனை அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக