BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை கன் சைட் இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை

திருகோணமலை கன் சைட் இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை

திருகோணமலை கடற்படை தளத்திற்குள் அமைந்துள்ள ‘கன் சைட்’ (Gun Site) என அழைக்கப்படும் இரகசிய நிலத்தடி தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளன. குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), குறித்த முகாம் வளாகத்தை அதிகாரப்பூர்வமாக சீல் வைத்து பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

பல ஆண்டுகளாக மனித உரிமை மீறல்கள் மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபடுத்தப்பட்ட இந்த முகாமில், சுமார் 60 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகள், அச்சுறுத்தல்கள் மற்றும் கப்பம் கோரும் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் அடிப்படையில், திருகோணமலை நீதிவான் எதிர்வரும் வியாழக்கிழமை (18) குறித்த இடத்திற்கு நேரடியாக சென்று உத்தியோகபூர்வ பரிசோதனை நடத்தவுள்ளார். நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெறவுள்ள இந்த ஆய்வு, முகாமின் உண்மை நிலைமை மற்றும் அங்கு இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய ஆதாரங்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ‘கன் சைட்’ தடுப்பு முகாம் தொடர்பான விசாரணைகள் நாட்டின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளதுடன், போர்க்கால மற்றும் அதற்கு பிந்தைய காலகட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கட்டாயக் காணாமற்போகல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல்கள் மற்றும் சித்திரவதை சம்பவங்கள் குறித்த உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் நீதிமன்ற ஆய்வின் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என சட்ட மற்றும் மனித உரிமை வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"