கண்டி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சுரங்கப் பாதைகள் மற்றும் பாதசாரி கடவைகளை பயன்படுத்தாமல் பிரதான வீதிகளை கடக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோடிக்கணக்கான செலவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளை புறக்கணிக்கும் நடவடிக்கைகள், நகரின் போக்குவரத்து ஒழுங்கை பாதிப்பதோடு உயிர் ஆபத்துகளையும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, கண்டி நகரின் முக்கிய பகுதிகளில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தை மீறி வீதிகளை கடக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக