BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி கட்டாயம் இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு

பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி கட்டாயம் இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு

இலங்கை பரீட்சை திணைக்களம் நடத்தும் அனைத்து பரீட்சைகளுக்கும் விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை வழங்குவது இனிமேல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெறவுள்ள க.பொ.த. (சாதாரண தர) பரீட்சைக்கு விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் முன்னதாகவே தேசிய அடையாள அட்டையை பெற்றிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பரீட்சை விண்ணப்ப செயல்முறைகளை ஒழுங்குபடுத்தவும், விண்ணப்பதாரர்களின் தகவல்களை துல்லியமாக சரிபார்க்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் மூலம் மாணவர்கள் மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் பரீட்சை விண்ணப்பிக்கும் முன் தங்களது NIC தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"