BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

குருணாகலில் மர்ம சம்பவம் ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு

குருணாகலில் மர்ம சம்பவம் ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு

குருணாகல் தொடருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘களனி குமாரி’ தொடருந்து திடீரென ஓட்டுநர் இன்றி முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தொடருந்தின் பிரேக் செயலிழந்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்டமாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தொடருந்து எந்த கட்டுப்பாடும் இன்றி சுமார் 100 மீட்டர் தூரம் நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அது குருணாகல் நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள மேடான பகுதியில் சென்று தானாகவே நின்றுள்ளது. இதற்கிடையில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிவேக மீனகயா தொடருந்து அதே பாதையில் வந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.

நிலைமையை உணர்ந்த ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு மீனகயா தொடருந்தின் ஓட்டுநருக்கு தகவல் வழங்கியதால், அவர் அவசரமாக ரயிலை நிறுத்தி விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தொடருந்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தொடருந்தில் கை பிரேக் கூட செயல்படுத்தப்படவில்லை என சந்தேகம் எழுந்துள்ளதுடன், தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"