BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குருணாகலில் மர்ம சம்பவம் ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு

குருணாகலில் மர்ம சம்பவம் ஓட்டுநரின்றி நகர்ந்த தொடருந்து, பெரும் விபத்து தெய்வாதீனமாக தவிர்ப்பு

குருணாகல் தொடருந்து நிலையத்தில் இரவு நேரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ‘களனி குமாரி’ தொடருந்து திடீரென ஓட்டுநர் இன்றி முன்னோக்கி நகர்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 28ஆம் திகதி இரவு 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தொடருந்தின் பிரேக் செயலிழந்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்டமாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தொடருந்து எந்த கட்டுப்பாடும் இன்றி சுமார் 100 மீட்டர் தூரம் நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அது குருணாகல் நிலையத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் உள்ள மேடான பகுதியில் சென்று தானாகவே நின்றுள்ளது. இதற்கிடையில் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிவேக மீனகயா தொடருந்து அதே பாதையில் வந்ததால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவியது.

நிலைமையை உணர்ந்த ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு மீனகயா தொடருந்தின் ஓட்டுநருக்கு தகவல் வழங்கியதால், அவர் அவசரமாக ரயிலை நிறுத்தி விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை தொடருந்து திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. தொடருந்தில் கை பிரேக் கூட செயல்படுத்தப்படவில்லை என சந்தேகம் எழுந்துள்ளதுடன், தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"