BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

வவுனியாவில் கோர விபத்து வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி

வவுனியாவில் கோர விபத்து வீதியில் நடந்துசென்ற இரு இளைஞர்கள் மீது பாய்ந்த கார், ஸ்தலத்திலேயே பலி

வவுனியா மாவட்டத்தின் கனகராயன்குளம் – பெரியகுளம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. A-9 பிரதான வீதியில் நடந்த இந்த விபத்தில், வீதியில் நடந்து சென்ற இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், முன்னால் சென்ற காரை பின்னால் வந்த ஹயஸ் வாகனம் மோதியதன் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நடந்துசென்ற இளைஞர்கள் மீது மோதியுள்ளது.

உயிரிழந்த இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் யாழ்ப்பாண முன்னாள் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் அவர்களின் மகன் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"