BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

இரண்டரை மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது தந்தையின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது

இரண்டரை மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய் கைது தந்தையின் விரைவு நடவடிக்கையால் குழந்தை உயிர் தப்பியது

காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, கஹடுவ, துடுவெகொட பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரண்டரை மாத வயதுடைய பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாக சந்தேகிக்கப்படும் தாய் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் தெரிவிப்பதாவது, குழந்தையை கிணற்றில் வீசிய பின்னர், தனது மகளை கிணற்றில் தவறவிட்டதாக அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கணவர், கிணற்றில் மிதந்து கொண்டிருந்த குழந்தையை உடனடியாக வெளியே எடுத்து, அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, கிணற்றின் ஆழம் குறைவாக இருந்ததாலும், தந்தையின் உடனடி நடவடிக்கையாலும் குழந்தையின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் உடல்நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"