BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

சிசிடிவி காட்சிகள் வெளியீடு; வர்த்தகர் பலி கொலையாளிகளைத் தேட பொலிஸ் குழுக்கள் அமைப்பு!

சிசிடிவி காட்சிகள் வெளியீடு; வர்த்தகர் பலி கொலையாளிகளைத் தேட பொலிஸ் குழுக்கள் அமைப்பு!

களுத்துறை, வெட்டுமகட பகுதியில் இன்று (மே 28) காலை அரங்கேறிய கொடூரத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் அதிரவைக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து, காரில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நபர், அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டு களுத்துறை நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விசாரணைகளின்படி, உயிரிழந்தவர் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிரபல வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்துப் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யு. வுட்லர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில்:

"துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு காரில் தப்பியோடிய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவியாளர்களைக் கண்டறிந்து உடனடியாகக் கைது செய்வதற்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன."

வெளியாகியுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட காரின் இலக்கத் தகவல்களைக் கொண்டு களுத்துறைப் பொலிஸார் மற்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பல்வேறு கோணங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"