BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் குறித்து கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரணத் தர (G.C.E. O/L) பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதிக்குள் வெளியாக வாய்ப்புள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, பரீட்சை விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. தற்போது பெறுபேறுகளை வெளியிட தேவையான இறுதி செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக ஊடகங்களில் கடந்த சில நாட்களாக பெறுபேறுகள் வெளியாகியதாக பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை எனவும் கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

பரீட்சார்த்திகள் தேவையற்ற மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வகையில் போலிச் செய்திகள் பரவுவதால், அவற்றை பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்புமாறு கல்வி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"