BREAKING
திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது திருகோணமலை ‘கன் சைட்’ இரகசிய தடுப்பு முகாமுக்கு சீல்: சித்திரவதை குற்றச்சாட்டுகள் குறித்து தீவிர விசாரணை செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய சான்றுகள்: இரும்புப் பொருள் மற்றும் உடைந்த வளையல் மீட்பு ராஜபக்ச குடும்பத்தைச் சுற்றிய விசாரணைகள் தீவிரம்: அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கவனம் இலங்கையின் 126 பாடசாலை விடுதிகள் நவீனமயமாக்கம்: ரூ.1,008 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் அக்கரப்பத்தனையில் ஐஸ் போதைப்பொருளுடன் 23 வயது இளைஞர் கைது

மருந்துப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

மருந்துப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மிகவேகமாக வீழ்ச்சியடைந்து வருவதன் காரணமாக, நாட்டின் அரச மற்றும் தனியார் சுகாதாரத் துறைகளில் மருந்துப் பொருட்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய பேராபத்து காணப்படுவதாக நிபுணத்துவ மருத்துவரும் அரசியல் செயற்பாட்டாளருமான சமால் சஞ்சீவ எச்சரித்துள்ளார். டொலரின் மதிப்பு அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளில் இருந்து மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு முன்பை விடவும் பல மடங்கு கூடுதல் தொகையைச் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


நாட்டின் சில பகுதிகளில் உள்ள மருந்தகங்களில் ஏற்கனவே ஒருசில அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ள டாக்டர் சமால் சஞ்சீவ, தற்போதைய பொருளாதார நிலைமை இப்படியே நீடித்தால் கடந்த 2022ஆம் ஆண்டில் நாடு சந்தித்ததைப் போன்றதொரு மிக மோசமான மருந்துத் தட்டுப்பாடு மீண்டும் ஏற்படக்கூடும் எனக் கவலை வெளியிட்டுள்ளார். 


எனவே, இந்த இக்கட்டான சூழலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்யவும் மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான தற்போதைய நடைமுறைகளில் அரசாங்கம் உடனடியாகத் தளர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என அவர் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"