ரஷ்ய இராணுவத்திற்குச் சொந்தமான ஏஎன்-26 ரக போக்குவரத்து விமானம் ஒன்று நேற்று (31.03.2026) மாலை 6 மணியளவில் கிரிமீயா தீபகற்பப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணித்த 6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முதற்கட்ட விசாரணைகளின்படி, விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறே இந்த விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போதே இந்த விபத்து நேரிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆரம்பகட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கிரிமீயா பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ள போதிலும், இது எதிரிகளின் தாக்குதலால் நிகழவில்லை என்றும், இயந்திரக் கோளாறே காரணம் என்றும் மொஸ்கோ உறுதிப்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக