மத்திய கிழக்கில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் மிகப்பெரிய நிலத்தடி ஆயுதக் கிடங்கான இஸ்ஃபஹான் மீது அமெரிக்கா இன்று அதிரடித் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நிலத்தடியில் பலப்படுத்தப்பட்ட கட்டமைப்புகளை ஊடுருவிச் சென்று தகர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2,000 பவுண்டு (சுமார் 900 கிலோ முதல் 2,000 கிலோ வரை) எடையுள்ள பல 'பங்கர்-பஸ்டர்' (Bunker-Buster) குண்டுகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே அமைந்துள்ள இந்த இஸ்ஃபஹான் தளம், ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்குப் முதுகெலும்பாக விளங்குவதுடன், அங்கு சுமார் 540 கிலோ அளவிலான செறிவூட்டப்பட்ட யுரேனியம் நிலத்தடியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் மிகப்பெரிய வெடிகுண்டுத் தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்றைப் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார். டுபாய் கடற்கரைக்கு அருகே குவைத் எண்ணெய் கப்பல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவும், போரை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு முயற்சியாகவும் இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது. இஸ்ஃபஹான் தளத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான வெடிப்புகள் மற்றும் அங்கிருந்து எழும்பும் அடர்த்தியான புகை மண்டலங்கள் தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி உலகளாவிய ரீதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக