பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வர்த்தகக் கப்பல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாக, டுபாய் துறைமுகத்தின் நங்கூரமிடும் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 'அல்-சல்மி' என்ற கப்பல் ஈரானால் குறிவைக்கப்பட்டுள்ளது. குவைத் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பல் மீது ஏவுகணைகள் அல்லது வெடிபொருட்கள் ஏந்திய ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் 2 மில்லியன் கொள்கலன் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய இந்தக் கப்பலின் தற்போதைய மதிப்பு 200 மில்லியன் டொலர்களுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், இது பாரிய எண்ணெய் கசிவுக்கு (Oil Spill) வழிவகுக்கக்கூடும் என்றும் குவைத் பெட்ரோலியக் கழகம் (KPC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்த செய்தி வெளியானதையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உடனடியாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் வழித்தடங்களில் இவ்வாறான தாக்குதல்கள் தொடர்வது சர்வதேச எரிசக்தி பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக