BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

தெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிப்புகள்: தீவிரமடையும் மத்திய கிழக்கு போர் நிலை

தெஹ்ரானில் சக்திவாய்ந்த வெடிப்புகள்: தீவிரமடையும் மத்திய கிழக்கு போர் நிலை

ஈரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் சக்திவாய்ந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டதாக கூறப்படும் ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டபோது, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட்டதால் இந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தெஹ்ரானின் வான்பரப்பிற்குள் நுழைந்த ஆளில்லா வானூர்திகள் மற்றும் ஏவுகணைகளை ஈரானிய பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்து வருகின்றன. இதனால் நகரின் பல பகுதிகளில் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பாயும் சத்தங்களும், தொடர்ச்சியான வெடிப்புகளும் பதிவாகியுள்ளன.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி முதல் ஈரான் மீது மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நள்ளிரவைத் தாண்டியும் தொடர்ந்து இடம்பெறும் வெடிப்புகள் காரணமாக தெஹ்ரான் நகர மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பலர் பாதுகாப்பிற்காக நிலத்தடி தஞ்சமிடங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை ராணுவ தளங்கள், கடற்படை தளங்கள் மற்றும் விமான தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்போது எண்ணெய் கிடங்குகள் மற்றும் எரிவாயு உற்பத்தி நிலையங்களை நோக்கி விரிவடைந்துள்ளன. ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள அசலூயே பகுதியில் அமைந்துள்ள தெற்கு பார்ஸ் எரிவாயு வளாகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலடியாக ஈரான், கட்டார், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் கிடங்குகள் மற்றும் எரிவாயு ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

அந்த வகையில் கட்டார் தலைநகர் தோஹாவிலிருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராஸ் லஃபான் எரிவாயு ஆலையை குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் செலுத்தப்பட்ட 5 ஏவுகணைகளில் 4 ஐ கட்டார் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன. இருப்பினும் ஒரு ஏவுகணை இலக்கை தாக்கியதால் அந்த எரிவாயு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலை கட்டார் கடுமையாக கண்டித்துள்ளது. தங்கள் நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஈரான் மற்றும் கட்டார் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளதுடன், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"