BREAKING
அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள் அரைச்சு வச்ச இறால் மசாலா; வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய சுவையான ரெசிபி நாடு முழுவதும் பலத்த தென்மேற்கு பருவக் காற்று எச்சரிக்கை: பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுரை பாட்டி கைப்பக்குவத்தில் கிராமத்து கோழி குழம்பு; சுவையான வீட்டுச்சிறப்பு ரெசிபி முகநூல் காதல் பெயரில் பரிசு மோசடி: ரூ.5 இலட்சத்தை இழந்த இலங்கை யுவதி மனைவியை ராணி போல் நடத்தும் ஆண் ராசிகள்; ஜோதிடத்தில் கூறப்படும் சிறப்பு ராசிகள்

சென்னையில் பரவி வரும் மெட்ராஸ் ஐ பொதுமக்கள் கவனத்திற்கு

சென்னையில் பரவி வரும் மெட்ராஸ் ஐ பொதுமக்கள் கவனத்திற்கு

தமிழகத்தில் கோடை காலம் தற்போதே தொடங்கிய நிலையில், பருவநிலை மாற்றத்தால் சென்னையில் மெட்ராஸ் ஐ தீவிரமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் எளிதில் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதால் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனை உட்பட தனியார் மருத்துவமனைகளிலும் இதன் பாதிப்பால் நாள்தோறும் பலர் சிகிச்சைக்கு வருகின்றனர்.

மருத்துவர்கள் கூறும் முக்கிய எச்சரிக்கைகள்:

மெட்ராஸ் ஐ காற்று மற்றும் மாசு வாயிலாக பரவும்.

தொற்றான நபர்கள் பயன்படுத்திய பொருட்களை பகிர்வது தொற்றை அதிகரிக்கும்.

அடிக்கடி கண்ணில் எரிச்சல், சிவப்பு மற்றும் நீர் சுரந்தல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

ஆரம்ப கட்டத்தில் சிகிச்சை பெறுவது அவசியம்.

பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட டவல், சோப்பு பயன்படுத்த வேண்டும்.

மருத்துவரின் அறிவுறுத்தலின்றி மருந்துகளை வாங்கி பயன்படுத்தக்கூடாது.

பொதுமக்கள் தங்களது பாதுகாப்பிற்கு மேற்படி எச்சரிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"