கடல் உணவுகளில் அதிகமாக விரும்பப்படும் உணவாக இறால் கருதப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் இந்த இறாலை வைத்து பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் சுவையும் வாசனையும் நிறைந்த இறால் மசாலா முக்கியமான ஒன்றாகும்.
இறால் மசாலா, வழக்கமான குழம்பு அல்லது வறுவலை விட சற்று வித்தியாசமாகவும் காரசாரமாகவும் தயாரிக்கப்படும் உணவாகும். இதை வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய முறையை சமையல் குறிப்புகள் மூலம் பகிரப்பட்டுள்ளது.
இந்த ரெசிபிக்காக முதலில் இறாலை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் காஷ்மீரி மிளகாய், சீரகம், கடுகு, வெந்தயம், தேங்காய் மற்றும் புளி கரைசல் ஆகியவற்றை சேர்த்து மசாலா பேஸ்ட் தயாரிக்கப்படுகிறது.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை நீங்கும் வரை சமைக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தயாரிக்கப்பட்ட மசாலா பேஸ்ட் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை சமைக்கப்படுகிறது. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் புளி கரைசல் சேர்த்து நன்றாக கலந்து வேகவைக்கப்படுகிறது.
இறுதியாக சுத்தம் செய்த இறால் சேர்த்து சில நிமிடங்கள் நன்றாக சமைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேகவிட்டால் சுவையான இறால் மசாலா தயார் ஆகிறது. இது சாதம் மற்றும் தோசைக்கு ஏற்ற சிறந்த உணவாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக