BREAKING
ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 178 கிமீ ரேஞ்சு - புதிய BGauss C12 MaxR மின்சார ஸ்கூட்டர் அறிமுகம் சாப்பிட விஜய் கூப்பிட்டும் நான் போகல..கேம் ஆடிய சிலர்!! உதயநிதி சொன்ன ரகசியம்.. ரூ. 100 கோடி வசூலை தாண்டிய DC படக்குழுவினருக்கு சன் பிக்சர்ஸ் கொடுத்த பிரம்மாண்ட பரிசு சூரிய பெயர்ச்சியால் தொழிலில் தடைகள்: பாதிக்கப்படும் ராசிகள் இவைதான்! பிறந்து 13 நாட்களில் பாஸ்போர்ட் பெற்ற குழந்தை – சர்வதேச சாதனை

அரநாயக்கவில் பயங்கரம்: வீதியில் வைத்து பெண் செவிலியர் கத்தியால் குத்திக் கொலை - காதலன் அதிரடி கைது!

அரநாயக்கவில் பயங்கரம்: வீதியில் வைத்து பெண் செவிலியர் கத்தியால் குத்திக் கொலை - காதலன் அதிரடி கைது!

கேகாலை, அரநாயக்க பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 35 வயதுடைய ருவினி மதுஷிகா என்ற பெண் செவிலியர், கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிள்ளையின் தாயான இவர், தனது கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றும் 33 வயதுடைய மனோஜ் பெத்தும் அகலங்க என்பவருடன் நீண்டகாலமாகத் தொடர்பில் இருந்துள்ளார். 


கடந்த முதலாம் திகதி பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் கொலையில் முடிந்துள்ளது. ஆத்திரமடைந்த சந்தேக நபர், வீதியில் சென்றுகொண்டிருந்த செவிலியரைத் துரத்திச் சென்று அவரது மார்பில் கத்தியால் குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த அவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர். 


பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையில், சந்தேக நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், இவர்களுக்குள் நிலவிய தனிப்பட்ட தகராறே இந்த விபரீத முடிவுக்குக் காரணம் என்பதும் தெரியவந்தது. கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில் அரநாயக்க பொலிஸார் கொலையாளியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தினர். மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் கேகாலை மாவட்டத்தில் பெரும் சோகத்தையும், பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"