BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

தன்ஷிகா பேட்டி: டி. ராஜேந்தர் விமர்சனத்தால் மன அழுத்தம்; ஒரு வாரம் வீட்டை விட்டே வெளியே வரவில்லை

தன்ஷிகா பேட்டி: டி. ராஜேந்தர் விமர்சனத்தால் மன அழுத்தம்; ஒரு வாரம் வீட்டை விட்டே வெளியே வரவில்லை

நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, மாஞ்சா வேலு, பரதேசி, கபாலி போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். 36 வயதாகிய தன்ஷிகா விரைவில் நடிகர் விஷாலை திருமணம் செய்ய உள்ளார். அவர்களின் நிச்சயர்தம் கடந்த வருடமே நடைபெற்றது.

டி. ராஜேந்தர் பேச்சால் ஏற்பட்ட மன அழுத்தம்

விழித்திரு பட விழாவில் தன்ஷிகா மேடையில் இருந்த டி. ராஜேந்தர் பெயரை சொல்ல மறந்துவிட்டார். இதையடுத்து டி. ராஜேந்தர் தன்ஷிகாவை கண்டபடி விமர்சித்து, ரஜினியுடன் நடித்தால் டி.ஆர் பெயரை தெரிந்து கொள்ள வேண்டியது, மேடை நாகரிகம் தெரியவில்லையா, பெரிய படத்தில் நடித்தால் நீ பெரிய நடிகையா போன்ற விமர்சனங்களைச் சுட்டிக்காட்டினார்.

இதனால் தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தன்ஷிகாவின் பதில்

தன்ஷிகா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:

"அவர் அப்படி பேசியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. மன அழுத்தத்தால் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பப்லிசிட்டிகாக அப்படி செய்ததாக பலரும் சொன்னார்கள். ஆனால் அப்படி இருந்தால் நான் ஏன் ஒரு வாரம் அப்படி இருந்திருக்க போகிறேன்."

இதன் மூலம் தன்ஷிகா நேர்ந்த மன அழுத்தத்தையும், அந்த சம்பவத்தின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"