இலங்கை முழுவதும் இயங்கும் அனைத்து சிறுவர் முன்பள்ளிகளும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள், எதிர்வரும் ஜூலை 1 ஆம் திகதிக்குள் அனைத்து முன்பள்ளிகளும் பதிவு நடவடிக்கையை நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மாத்தறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற முன்பள்ளி கல்வி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, எதிர்காலத்தில் புதிய முன்பள்ளி ஒன்றை ஆரம்பிப்பதற்கு முன், அதற்கான பதிவு கட்டாயமாக இருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் நோக்கம், முன்பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி சூழலை உறுதி செய்யவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக