இதன்பின் நடந்து முடிந்த சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக பல கேள்விகள் முன் வைக்கப்பட்டது. விஜய் அதற்காக பதிலளிப்பார் என்று கருதப்பட்ட நிலையில், 40 ஆண்டுகளுக்கு முன் நடந்த மிசாவில் ஸ்லானின் கைதானதை கிண்டலான உடல்மொழியை வைத்து பேசி சர்ச்சையானது. இதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பக்குவமான மனநிலையில் சரியாக ஹாண்டில் செய்தார்.
இந்நிலையில், விஜய்க்கும் உதயநிதிக்கும் ஏற்பட்ட சில பழைய சம்பவம் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
உதயநிதி சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில், விஜய்யுடன் சேஃப் டிஸ்டன்ஸ் தன் மெயின்டெயின் செய்கிறேன், அவரை புதாண்டுக்கு சந்தித்தேன், யாரையும் அவர் நெருங்கவிடமாட்டார். நட்பாகிவிட்டால் ரொம்ப நெருக்கமாகி விடுவார். என்னிடம் நெருக்கமாகத்தான் இருந்தார், ஆனால் சிலர் எங்களிடையே கேம் விளையாடிவிட்டார்கள்.
அதனால் பெரிய ஸ்பேஸ் உருவாகிவிட்டது. பின் நானே அவரிடம் நேரில் சென்று இதுதான் நடந்தது, இதையெல்லாம் நான் செய்யவில்லை என்று விளக்கியதால் புரிந்துகொண்டார். இப்போது அடிக்கடி ஃபோனில் பேசுகிறோம், அடிக்கடி அவரது வீட்டுக்கு என்னை சாப்பிட கூப்பிடிவார், ஆனால் நான் போயி பல காலமாகிவிட்டது, கடைசியாக தேர்தலுக்கு முன்(2021) போனேன், அதற்குப்பின் போகவில்லை என்று கூறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக