தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யா, தற்போது தனது அடுத்த திரைப்படமான ‘கருப்பு’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சூர்யா 46 மற்றும் சூர்யா 47 ஆகிய இரண்டு திரைப்படங்களையும் கைவசம் வைத்துள்ள நடிகர் சூர்யா, அவற்றின் படப்பிடிப்புகளில் தற்போது விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகிறார்.
நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்த செய்திகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது கவனம் பெறுவது வழக்கம்.
அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்,
“தேவ் இவ்வளவு பெரியவனா வளர்ந்துவிட்டார்!”
என ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். சூர்யாவைப் போலவே உயரம், முகஅமைப்பு என தேவ் வளர்ந்திருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக