BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முன்னுரிமை அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி

யாழில் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: முன்னுரிமை அடிப்படையில் தீர்வு வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காண அரசாங்கம் உறுதியளித்துள்ளது. காணாமல் போனோரின் உறவினர்கள் எதிர்நோக்கும் துயரங்களும் சவால்களும் அரசாங்கத்தின் சொந்தப் பிரச்சினைகளாகக் கருதப்பட்டு அவற்றைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த உறுதி வழங்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி பெற்றுத்தருதல் மற்றும் தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் போன்ற முக்கிய பொறுப்புகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

காணாமல் போனவர்கள் வெறும் புள்ளிவிபரங்களோ அல்லது எண்ணிக்கைகளோ அல்ல என்றும், அவர்களின் குடும்பங்கள் பல ஆண்டுகளாக மனவேதனையுடனும் நம்பிக்கையுடனும் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் இதுவரை 2,452 பேர் காணாமல் போனதாக பதிவாகியுள்ளதுடன், பதிவு செய்யப்படாத பல சம்பவங்களும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், உண்மை கண்டறிதல், பொறுப்புக்கூறல் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாகவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் செயற்பாடுகள் மூலம் உண்மை வெளிக்கொணரல், நீதி நிலைநாட்டல் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"