ஐபிஎல் 2026 தொடரின் 3-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் நந்ரே பர்கரின் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 127 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஜேமி ஓவர்டன் (43) தவிர மற்ற முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
128 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில், 15 வயதே ஆன தொடக்க வீரர் வைபவ் சூர்யவன்ஷி வரலாற்றுச் சாதனை படைத்தார். வெறும் 17 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய அவர், 5 மெகா சிக்ஸர்களுடன் 305.88 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் சிஎஸ்கே பந்துவீச்சை நிலைகுலையச் செய்தார். வைபவ் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் (38) அதிரடியால் ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இந்த மெகா தோல்வியால் சிஎஸ்கே அணியின் ரன் ரேட் -4.171 ஆகக் குறைந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. 15 வயது சிறுவனிடம் அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே வீரர்கள் பாடம் கற்றுக் கொண்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக