ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி சுமார் 16,600 கோடி ரூபாய்க்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சுமார் 15,000 கோடி ரூபாய்க்கும் புதிய குழுமங்களுக்கு விற்கப்பட்டுள்ளன. இந்த பிரம்மாண்ட வளர்ச்சியைப் பாராட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார். அதில், ஐபிஎல் தொடரின் இந்த மாபெரும் மதிப்பிற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவின் தொலைநோக்கு பார்வையே முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் தொடரை உருவாக்கிய லலித் மோடியின் பெயரை அவர் குறிப்பிடாததால் ஆத்திரமடைந்த லலித் மோடி, சஞ்சீவ் கோயங்காவை "கோமாளி" எனச் சாடியுள்ளார். "இந்த ஐபிஎல் மாடலை உருவாக்கியது யார் என்பதை கோயங்கா மறந்துவிட்டார்; அவருக்கு ஞாபக மறதி வந்துவிட்டது. ஒரு ட்வீட் மூலம் வரலாற்றை மாற்றிவிடலாம் என நினைக்கும் இவருக்கு கிரிக்கெட் குறித்து எந்த அறிவும் இல்லை," என லலித் மோடி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். 2010-ல் இந்தியாவை விட்டு வெளியேறிய லலித் மோடி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஐபிஎல் விவகாரத்தில் உரிமையாளர் ஒருவரை பகிரங்கமாக வசைபாடியுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக