இயக்குநர் ஆத்தியா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் உருவாகி கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், அக்ஷய் கண்ணா, மாதவன், அர்ஜுன் ராம்பால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த வெற்றியைத் தொடர்ந்து துரந்தர் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் நீண்டநாளாக காத்திருந்தனர்.
அதன்படி, கடந்த வாரம் வெளியான துரந்தர் 2 திரைப்படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்துகளை பெற்றிருந்தாலும், வெளியான முதல் நாளிலிருந்தே வசூலில் நல்ல முன்னேற்றத்தை பதிவு செய்து வருகிறது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, துரந்தர் 2 திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே உலகளவில் ரூபாய் 850 கோடிக்கும் மேற்பட்ட வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் மூலம், இந்த திரைப்படம் குறுகிய காலத்திலேயே பெரிய அளவிலான வர்த்தக வெற்றியைப் பெற்றுள்ளதுடன், தொடர்ந்து வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக