இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றித் திரைப்படமாக தாய் கிழவி உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராதிகா, சிங்கம்புலி, பால சரவணன், அருள் தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்ட நடிகர்கள் போட்டிபோட்டு நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதன் காரணமாக, திரைப்படத்தின் வசூலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தாய் கிழவி திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 50 கோடி ரூபாவைத் தாண்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் மூலம் நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படத்தின் தமிழக வசூலையும் இந்த படம் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த திரைப்படமாக இருக்கும் பராசக்தி திரைப்படத்தின் 57 கோடி ரூபா வசூலையும் விரைவில் தாய் கிழவி திரைப்படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக