BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

ஈராக் கடல் பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் வெளிநாட்டு எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் தாக்குதல் ஒருவர் உயிரிழப்பு

ஈராக் கடல் பகுதியில் இரண்டு வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் பாரிய தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எரிசக்தி விநியோகத்தை பாதிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன. தாக்குதலுக்கு இலக்கான இரண்டு கப்பல்களும் தற்போது கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தையடுத்து கப்பல்களில் இருந்த 25 தொழிலாளர்களை அதிகாரிகள் அவசரமாக வெளியேற்றியுள்ளனர். இருப்பினும் ஒரு தொழிலாளி உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் கடுமையாக முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், இந்த தாக்குதலில் வெடிபொருட்கள் ஏற்றிச் சென்ற ஈரானின் சிறிய படகுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தையடுத்து மத்திய கிழக்கு பகுதியில் பதற்ற நிலை மேலும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"