BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

இந்தியப் பெருங்கடலில் மூளும் போர் அபாயம்: அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுக்கும் அவசர எச்சரிக்கை!

இந்தியப் பெருங்கடலில் மூளும் போர் அபாயம்: அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுக்கும் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அச்சுறுத்தல்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று கொழும்பில் அவசர சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, கடந்த வாரம் காலி கடற்பரப்பிற்கு அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்காவால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, உலக அரசியல் மோதல்கள் இலங்கைக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டதாக எச்சரித்தார். தற்போது நாட்டில் ஒரு மாதத்திற்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பு உள்ள நிலையில், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால் ஏற்படக்கூடிய எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கச் சூரிய மற்றும் காற்றாலை மின் திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.


மேலும், மத்திய கிழக்கில் வாழும் 1.5 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கடல் போர் அபாயக் காப்புறுதி கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தேயிலை மற்றும் ஆடைத் தொழில்துறையினருக்கு விசேட மானியங்களை வழங்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். சர்வதேச விலை உயர்வைச் சாட்டாக வைத்து மக்கள் மீது மேலதிக வரிச் சுமைகளை ஏற்ற வேண்டாம் என எச்சரித்த அவர், இந்தியப் பெருங்கடல் பிராந்திய சங்கத்தின் தலைமைப் பதவியைப் பயன்படுத்தி கடல்வழிப் பாதைகள் இராணுவமயமாக்கப்படுவதைத் தடுக்க இலங்கை இராஜதந்திர ரீதியில் முன்னிற்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"