BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

. மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர்கள் கைது!

. மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கட்டுநாயக்கவில் தொழிலதிபர்கள் கைது!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (11.03.2026) மதியம் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து வருகை தந்த மூன்று வெளிநாட்டுப் பயணிகள், சுமார் 13.6 மில்லியன் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். 22, 26 மற்றும் 49 வயதுடைய மலேசியத் தொழிலதிபர்களான இவர்கள், அந்நாட்டில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களை நடத்தி வருபவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

இவர்கள் கொண்டு வந்த 4 பொதிகளுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 454 கையடக்கத் தொலைபேசிகளைச் சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தினர் இணைந்து கைப்பற்றியுள்ளனர். தற்போது சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு, விமான நிலையச் சுங்க அதிகாரிகளால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"