'வாணி ராணி', 'வம்சம்', 'மரகத வீணை' போன்ற பல வெற்றிப் பெற்ற சீரியல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி. ஆரம்பத்தில் அமெரிக்காவில் செய்தியாளராகப் பணியாற்றி, பின்னர் இந்தியாவுக்கு வந்து சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது தடம் பதித்தார். கடந்த ஆண்டு நிறைவடைந்த 'பாக்கியலட்சுமி' சீரியலில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்ட நிலையில், தற்போது 'கார்த்திகை தீபம்' மற்றும் 'மகளே என் மருமகளே' ஆகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, அவ்வப்போது சேலை மற்றும் மாடர்ன் உடைகளில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவார். அந்த வகையில், தற்போது அவர் பதிவிட்டுள்ள குட்டையான ஆடையுடனான லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
செய்திகள்
சமூக வலைதளங்களில் வைரலாகும் நடிகை ரேஷ்மா பசுபுலடியின் புதிய புகைப்படங்கள்!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக