BREAKING
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி கட்டாயம்; விதிமுறையை மீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு; பிராந்திய அமைதிக்கு புதிய வாய்ப்பு களுத்துறையில் மர்ம மரணம்: இரத்தக் காயங்களுடன் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு வைத்தியசாலையில் சுரேஷ் சலேவுக்கு தாதி கடும் எச்சரிக்கை; மருந்துகளை உட்கொள்ள மறுத்த நிலையில் பரபரப்பு தகவல் நெடுந்தீவு மக்களுக்கு நிம்மதி; இன்று முதல் மீண்டும் சேவையில் வடதாரகை படகு! அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனப் பட்டி கட்டாயம்; விதிமுறையை மீறுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தத்திற்கு உலக நாடுகள் வரவேற்பு; பிராந்திய அமைதிக்கு புதிய வாய்ப்பு களுத்துறையில் மர்ம மரணம்: இரத்தக் காயங்களுடன் கணவன், மனைவி சடலங்களாக மீட்பு வைத்தியசாலையில் சுரேஷ் சலேவுக்கு தாதி கடும் எச்சரிக்கை; மருந்துகளை உட்கொள்ள மறுத்த நிலையில் பரபரப்பு தகவல் நெடுந்தீவு மக்களுக்கு நிம்மதி; இன்று முதல் மீண்டும் சேவையில் வடதாரகை படகு!

யாழ்ப்பாணத்தில் டீசல் பதுக்கல்: இருவர் கைது, லீட்டர் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் டீசல் பதுக்கல்: இருவர் கைது, லீட்டர் பறிமுதல்

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டீசல் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது சந்தேகநபர்கள் வசமிருந்த 800 லீட்டர் டீசல் மற்றும் அதனை பதுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து விற்பனை செய்ய முயன்றதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"