ஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்தது ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட நிலையில், நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்து இதுவரை எந்தத் தெளிவான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுடன், குழப்பமும் நிலவுகிறது.
அஜித் தற்போது துபாயில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் அவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்கள் தயாராகக் காத்திருக்கின்றனர் எனத் திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சம்பள விவகாரத்தில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக புதிய படம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்ததால் படம் அறிவிப்பே வராத நிலையில் உள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளதுடன், புதிய தகவல் எதுவும் வெளியாகாதது குறித்து அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக