BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

. . : பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் புதிய சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு

. . : பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கம் புதிய சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு

நடைமுறையில் அமலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) உடனடியாக முழுமையாக நீக்க வேண்டும் என்றும், அதற்கு மாற்றாக கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டமூலத்தையும் வன்மையாக எதிர்க்க வேண்டும் என்றும் Ilankai Tamil Arasu Kachchi பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில், இச்சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து போராட்டங்களிலும் கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் தீவிரமாக கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதே கட்சியின் நீண்டகாலக் கோரிக்கை.

இதனை வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சட்டத்திற்கு மாற்றாக ‘அரசைப் பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டமூலம்’ என்ற பெயரில் புதிய சட்டம் கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

இப்புதிய சட்டமூலம் எக்காரணம் கொண்டும் நிறைவேற்றப்படக் கூடாது என்பதில் கட்சி உறுதியுடன் உள்ளது.

எனவே, இச்சட்டங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து போராட்டங்களிலும் Ilankai Tamil Arasu Kachchi உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"