இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் மீதான தடையை நீக்கக் கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மத்திய அரசு 1991 ஆம் ஆண்டு LTTE அமைப்பைத் தடை செய்தது. அதன் பின்னர், இந்தத் தடை இந்தியாவால் காலக்கெடுதேற்பு செய்யப்படுவதோடு, அவ்வப்போது நீடிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பின்னர் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் தடையை நீட்டித்துள்ளனர்.
2012 ஆம் ஆண்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA) கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவை UAPA தீர்ப்பாயம் பின்னர் உறுதி செய்தது.
இதனை எதிர்த்து, வைகோ 2013 இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு ஒன்றை செய்திருந்தார்.
நேற்று, நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் மும்மினேனி சுதீர் குமார் ஆகியோரைக் கொண்ட குழு முன் வழக்கு விசாரணைக்காக வந்தது. விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் முன்னிலையான சட்டத்தணி வழங்கை ஒத்திவைக்கக் கோரியது. இதன்படி நீதிபதிகள் குழு விசாரணையை பெப்ரவரி 16 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக