முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பாட்டு அரசியலிலிருந்து முழுமையாக ஒதுங்கியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தற்போது தாம் எந்தவொரு அரசியல் கட்சியிலும் அங்கம் வகிப்பதில்லை என்றும், அரசியல் நடவடிக்கைகளில் நேரடியாக பங்கேற்கவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும், நாட்டுக்கு நன்மை செய்யும் செயற்பாடுகள் அல்லது நிகழ்வுகள் இடம்பெறும்போது அவற்றில் கலந்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
அரகலயின் பின்னர் அரசியல் ரீதியாக மைத்திரிபால சிறிசேன ஓரங்கட்டப்பட்ட நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் அவரது மகன் போட்டியிட்டிருந்தாலும் வெற்றி பெற முடியவில்லை. இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் இந்தத் திடீர் முடிவு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளதுடன், அவரது நீண்ட அரசியல் பயணத்திற்கு ஒரு இடைவேளை அல்லது முடிவாக இது கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக