BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டி உலகக்கோப்பை : வெளியேறிய வங்கதேசத்திற்கு மீண்டும் வாய்ப்பு? - பாகிஸ்தானின் 'புறக்கணிப்பு' முடிவில் ஒளிந்திருக்கும் ட்விஸ்ட்!

டி உலகக்கோப்பை : வெளியேறிய வங்கதேசத்திற்கு மீண்டும் வாய்ப்பு? - பாகிஸ்தானின் 'புறக்கணிப்பு' முடிவில் ஒளிந்திருக்கும் ட்விஸ்ட்!

2026 டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் உலகம் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் விளையாட பாதுகாப்பு காரணங்களுக்காக மறுப்பு தெரிவித்த வங்கதேச அணியை ஐசிசி (ICC) தொடரிலிருந்து நீக்கியது. ஆனால், தற்போது பாகிஸ்தான் எடுக்கப்போகும் ஒரு முடிவால் வங்கதேசம் மீண்டும் உள்ளே வர வாய்ப்பு உருவாகியுள்ளது.


வங்கதேசத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), இந்தத் தொடரை புறக்கணிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மொஹ்சின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டதை "அநீதி" என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்புடன் ஆலோசித்து வரும் நக்வி, வரும் திங்கட்கிழமைக்குள் இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுத் திட்டம் என்ன?
ஒருவேளை பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினால், அவர்களுக்குப் பதிலாக 'ஏ' பிரிவில் வங்கதேசம் சேர்க்கப்படும். ஐசிசி-யின் புதிய ஏற்பாட்டின்படி, வங்கதேசம் தனது அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் விளையாடாமல் இலங்கையில் விளையாட அனுமதிக்கப்படும். இது வங்கதேசத்தின் பாதுகாப்பு கவலைகளைப் பூர்த்தி செய்யும் என்பதால், ஐசிசி இந்த மாற்றுத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"