கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் வீட்டுப்பணிக்கு சென்ற 15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026.01.18 அன்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்ட மலையக பகுதியைச் சேர்ந்த சிறுமி தற்போது கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
2026.01.18 அன்று கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். பாதிக்கப்பட்ட மலையக பகுதியைச் சேர்ந்த சிறுமி தற்போது கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக