BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் போதைப் பொருள் வியாபாரிகள் இருவர் கைது கிராம் ஜஸ் போதைப்பொருள் பறிமுதல்

மட்டக்களப்பில் போதைப் பொருள் வியாபாரிகள் இருவர் கைது கிராம் ஜஸ் போதைப்பொருள் பறிமுதல்

ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23.01.2026) மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில்,

பொலிஸார் நேற்று இரவு மாறுவேடத்தில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது,

ஒரு குழு ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலும்,

மற்றொரு குழு காத்தான்குடி பகுதியிலும் ஒரே நேரத்தில் வீதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது,

காத்தான்குடி எப்.சி. வீதியில் போதைப்பொருள் வியாபாரத்திற்காக எடுத்துச் சென்ற நிலையில்,

26 வயதுடைய வியாபாரி ஒருவர்

10 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை,

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள வீதியில்,

அப்பகுதியில் உள்ள “ஈஸ்ரன் ரெய்லர் செப்” எனப்படும் ஆடைகள் தைக்கும் கடையின் உரிமையாளரான வியாபாரி ஒருவர்

110 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும்

பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும்,

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"