தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், தற்போது சேயோன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடித்து வருகிறார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், படப்பிடிப்பில் கிடைத்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட சிவகார்த்திகேயன், தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனும் அவரது மனைவி ஆர்த்தியும் ஜோடியாக எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த ரொமான்டிக் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக