BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

"பௌத்தத்தைப் பாதுகாப்பது ஆட்சியாளர்களின் தட்டிக்கழிக்க முடியாத கடமை!" - விகாரைச் சொத்துக்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை.

"பௌத்தத்தைப் பாதுகாப்பது ஆட்சியாளர்களின் தட்டிக்கழிக்க முடியாத கடமை!" - விகாரைச் சொத்துக்கள் குறித்து ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை.

நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் அரசியலமைப்பு ரீதியாகக் கடமைப்பட்டுள்ளனர் என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். விகாரைகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் தானங்கள் ஆகியவற்றில் தற்போதைய ஆட்சியாளர்கள் தலையிடக் கூடாது என்பதை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அந்நியர் ஆட்சிக் காலத்தில் கூடப் பௌத்தத்திற்கு வழங்கப்பட்ட கௌரவத்தையும் பாதுகாப்பையும் அவர் இந்த உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

1931-ஆம் ஆண்டின் பௌத்த விகாரைகள் மற்றும் ஆலயங்கள் (நன்கொடை) கட்டளைச் சட்டத்தின்படி, விகாரைச் சொத்துக்கள் விகாரைகளுக்கே சொந்தமானவை. இதில் எவரும் தலையிட முடியாது.

பொதுமக்கள் விகாரைகளுக்குத் தானமாக வழங்கும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் அந்தந்த ஆலயங்களுக்கே உரியவை. இதில் மாற்றங்களைச் செய்ய முயல்வது ஆபத்தானது.

1815-ஆம் ஆண்டு கண்டிய ஒப்பந்தத்தின் போது, பிரித்தானியாவின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் கூடப் பௌத்தத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்பதை அவர் நினைவூட்டினார்.

ஒவ்வொரு கட்சியும் மகா சங்கத்தினருடன் இணைந்து மதத்தைப் பாதுகாப்பதற்கான பொறுப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"