BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பொலிஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் சந்தேகநபர் மினுவாங்கொடவில் அதிரடியாக கைது

பொலிஸ் அதிகாரியை சுட்டுவிட்டு தப்பியோடிய போதைப்பொருள் சந்தேகநபர் மினுவாங்கொடவில் அதிரடியாக கைது

கட்டுநாயக்க கடமொட்டாவ பகுதியில் பொலிஸ் அதிகாரியின் சேவைத் துப்பாக்கியைப் பறித்து அவரைச் சுட்டுவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படும் போதைப்பொருள் தொடர்பான சந்தேகநபர் பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் வெளியிட்ட தகவலின்படி, குறித்த சந்தேகநபர் நேற்று (15) பிற்பகல் மினுவாங்கொட தேவோலபோல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தன்று, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபரை இரு பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று கைது செய்திருந்தனர். பின்னர், அவரை பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், சந்தேகநபர் அருகில் இருந்த பொலிஸ் அதிகாரியின் சேவைத் துப்பாக்கியைப் பறித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, குறித்த துப்பாக்கியால் பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு, மற்றொரு மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸார் இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் மூலம் சந்தேகநபர் மினுவாங்கொட தேவோலபோல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இலங்கை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"