BREAKING
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல் சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? வைரலாகும் புகைப்படங்கள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு வெங்கலச்செட்டிகுளம் பிரதேச செயலாளர் பணியிலிருந்து இடைநிறுத்தம் டெங்கு கட்டுப்பாட்டிற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்; சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை ராகு நட்சத்திர பெயர்ச்சி: பண விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்! இறக்குமதி நடைமுறைகளில் மாற்றம்: இலங்கையில் மருந்து விலைகள் உயரக்கூடும் என தகவல்

தெல்தெனியாவில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியீடு

தெல்தெனியாவில் காருக்குள் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியீடு

கண்டி மாவட்டத்தின் தெல்தெனிய பகுதியில் கைவிடப்பட்டிருந்த கார் ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண் தொடர்பில் பொலிஸார் பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் அம்பாறை வைத்தியசாலையில் இயன்முறை வைத்தியராக பணியாற்றிய 33 வயதுடைய ஷம்யா தர்ஷனி என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் வெலிகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், உயிரிழந்த பெண்ணும் அவரது காதலனும் கனடாவுக்கு செல்வதற்கான திட்டங்களை மேற்கொண்டிருந்ததாகவும், அதற்காக பெருமளவு பணம் கடனாக பெற்றிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

எனினும், திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத நிலையில் கடன் வழங்கியவர்கள் பணத்தை மீளக் கோரியதால், அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கடந்த ஜூன் 3ஆம் திகதி முதல் ஜூன் 16ஆம் திகதி வரை நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்த ஹோட்டலின் கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மயக்க நிலையில் காணப்பட்ட பெண்ணை அவரது காதலன் அழைத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள காதலன் கண்டி மாவட்டத்தின் கன்னொருவ பகுதியைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் எனவும், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஹோட்டலில் தங்கியிருந்த காலப்பகுதியில் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என உயிரிழந்த பெண் தனது சகோதரரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்திருந்ததாகவும், அவர் மனநல ஆலோசனைகளையும் பெற்றிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேவேளை, தலைமறைவாகியுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையே சுமார் எட்டு மாதங்களுக்கு முன்னர் காதல் தொடர்பு ஏற்பட்டிருந்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"