கொழும்பின் புறநகர் பகுதியான தலவத்துகொடவில் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் பல நிலையங்கள் மீது பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
வாலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
சுற்றிவளைப்பின் போது 34 பெண்கள் உட்பட மொத்தம் 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும், சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை, சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக