பிரான்சின் Evian-les-Bains நகரில் நடைபெறவுள்ள G7 உச்சி மாநாட்டை முன்னிட்டு, சுவிட்சர்லாந்து தனது எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கையாக 4,000 ராணுவ வீரர்களை களமிறக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டைச் சுற்றி பாதுகாப்பு அச்சங்கள் அதிகரித்துள்ளன.
2003 ஆம் ஆண்டு இதே நகரில் நடைபெற்ற G8 மாநாட்டின் போது ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சூறையாடல் சம்பவங்கள் இன்னும் நினைவில் இருப்பதால், இந்த முறை எந்தவித அசம்பாவிதங்களையும் தவிர்க்க முன்கூட்டியே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஜெனீவா விமான நிலைய பாதுகாப்பு, வான்வெளி கண்காணிப்பு, ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றை சுவிஸ் ராணுவம் மேற்கொள்ளவுள்ளது. சர்வதேச மாநாடுகளைச் சுற்றியுள்ள பாதுகாப்பு சவால்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக